தொடரும் சோகம்... நீட் தேர்வு பயிற்சி மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வு உட்பட பல்வேறு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையடுத்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் ராஜஸ்தானில் தங்கி தேர்வுக்கு பயிற்சி செய்து வருகின்றனர்.
ஆனால், தேர்வு அழுத்தம் காரணமாக பல மாணவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தை சேர்ந்த ஹர்ஷ்ராஜ் சங்கர் 17 வயது மாணவன் ராஜஸ்தானின் கோட்டா மாவட்டம் ஜவகர் நகரில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற்று வந்தான்.2024 ஏப்ரல் முதல் கோட்டாவில் தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த சங்கர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்கி இருந்த ஓட்டல் அறையில் சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். தகவலறிந்து வந்த போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு போட்டி தேர்வுகளில் பயிற்சிக்கு வந்து கோட்டா மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!