தொடரும் சோகம்... ஜூலை 8ம் தேதி வரை ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறை... இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகம் முழுவதும் மீன்பிடித் தடைக்காலம் ஜூன் 15ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் ஜூன் 16ம் தேதி முதல் தான் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இலங்கை கடற்படை அதிகாரிகள், நேற்று கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும், சிறைபிடித்த ஒரு படகையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 8ம் தேதி வரை மீனவர்களை யாழ்ப்பாண சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!