பக்காவா ப்ளான் போட்டும் சோகம்.. ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
விழுப்புரம் மாவட்டம், சென்னை - திருச்சி புற வழி சாலையில் ஜானகிபுரம் ரயில்வே மேம்பாலம் அருகே மினி லாரி ஒன்று சென்றுள்ளது. திடீரென அந்த மினி லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் மைய தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாது.
அந்த விபத்தை கண்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வாகனத்தின் அருகே செல்ல முயன்றுள்ளனர். அப்போது அந்த வாகனத்தில் இருந்த இரண்டு நபர்கள் தப்பி தலை தெறிக்க வாகனத்தை விட்டு வெளியேறி ஓடி உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த சென்ற விழுப்புரம் தாலுகா போலீசார் சென்றனர். அப்போது லாரி ஓட்டுனர் வண்டியை விட்டு விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், மினி வேனில் சேதனை செய்தபோது பூண்டு மற்றும் வெங்காய மூட்டைகளுக்கு அடியில் 35 மூட்டைகளில் ஒரு டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனால் குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
இதனையடுத்து போலீசார் ரேஷன் அரிசி மற்றும் மினிவேனை பறிமுதல் செய்து வண்டி வாகன எண்னை கொண்டு தப்பியோடிய ஓட்டுனர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரேசன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, ஓட்டுனர் யார் என்பது குறித்து தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க