சிக்னல் கொடுத்தும் நிற்காத ரயில்.. பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட ஓட்டுநர்!

 
நிற்காத ரயில்

நடுத்தர குடும்பத்தினர்களுக்கு ரயில் பயணம் தான் பட்ஜெட்ல ஏற்றது. தவிர, இரவு பயணங்களில், அலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில் அலுப்பில்லாமல் பயணிப்பது என மின்சார ரயிலை நம்பி லட்சக்கணக்கானோர் தினந்தோறும் சென்னை  மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் மட்டுமே மின்சார ரயிலை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், வார நாளான நேற்று அலுவலகம் முடிந்து வீடு திரும்ப ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளுக்கு அதிர்ச்சி.

சென்னை வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் வழியாக தினமும் மாலை 5.35 மணிக்கு திருத்தணி வரை மின்சார ரயில் இயக்கப்படுவது வழக்கம். தினந்தோறும் வழக்கமாக புளியமங்கலம் ரயில் நிலையத்தில் இந்த ரயில் இரவு 8.15 மணிக்கு நின்று செல்லும். வழக்கமாக பயன்படுத்துபவர்கள் புளியமங்கலம் ரயில் நிலையம் வந்தும், ரயில் நிற்காததால் அதிர்ச்சியடைந்தனர். நேற்று ரயில் நிலையத்தில், சிக்னல் கொடுத்தும் நிற்காமல் ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு சென்று நிறுத்தப்பட்டது.

EMU

அரக்கோணம் ரயில் நிலையத்தில் நின்றதும், பயணிகள் என்ஜின் பகுதிக்கு சென்று ரயில் ஓட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரயில் நிற்பதற்காக புளியமங்கலம் நிலையத்தில் சிக்னல் கொடுத்தும் எப்படி நிற்காமல் ரயிலை இயக்குனீர்கள்? ரயிலின் கார்டும் சிக்னலை கவனிக்கவில்லையா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி பயணிகள் ரயிலை அடுத்து எடுக்க விடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த அரக்கோணம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் வெங்கடேசன் ஆகியோர் பயணிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் 20 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. 

Signal

பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட ஓட்டுநர் ஜோச்வா, ஞாபக மறதியில் சிக்னலைப் பார்க்காமல் விரைவு மின்சார ரயில் என நினைத்து ரயிலை இயக்கியதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து ஓட்டுநர் ஜோஸ்வா மற்றும் கார்டு தியாகராஜனிடம் அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். ஞாபக மறதில் நிறுத்தலையா? சரியா போச்சு... தமிழ்நாட்டை பீகாரா மாத்திட்டாங்க? என்று புலம்பியபடியே பயணிகள் கிளம்பினார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web