ஓபிஎஸ் மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து!! 17 பேர் படுகாயம்!!

 
வேன் விபத்து

நேற்று ஏப்ரல் 26ம் தேதி திங்கட்கிழமை திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் ஓபிஎஸ் சார்பில் முப்பெரும் விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. அதன்படி  எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று மாலை நடத்தப்பட்டது.  அதிமுக  அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

ஆம்புலன்ஸ்

 இதில் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லாரிகள், வேன்கள் மூலம் வரவழைக்கப்பட்டிருந்தனர்.  இந்நிலையில், திருச்சியில் நடைபெற்ற ஓபிஎஸ் மாநாட்டில் பங்கேற்று விட்டு சொந்த ஊர் திரும்பிய தொண்டர்கள் வேன் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஓபிஎஸ், இபிஎஸ் நியமனம் செல்லும்! ஐகோர்ட்டு அதிரடி!

மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே  வந்து கொண்டிருந்த போது இந்த கோர விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயமுருகன் உட்பட 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 17 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை  ஏற்படுத்திது.அத்துடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web