பகீர் வீடியோ... ஆம்புலன்ஸ் அடுத்தடுத்து 7 பேர் மீது மோதி பயங்கர விபத்து… ஒருவர் பலி, 6 பேர் கவலைக்கிடம்!

பெங்களூரு நகரில் ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் வில்சன் கார்டன் பகுதியில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் நேற்று மே 1ம் தேதி வியாழக்கிழமை காலை 8.30க்கு சஞ்ஜீவினி ஆம்புலன்ஸ் மிகுந்த வேகத்துடன் வந்தது. இதனையடுத்து தள்ளுவண்டிகள், ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் பாதசாரி உட்பட 7 பேர் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் 49 வயது ரமேஷ் என்ற தேங்காய் விற்பனையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
#WATCH - Ambulance rams into pedestrians and vehicles in Bengaluru's BTS Road; one dead, several injured. #Viral #Ambulance #Bengaluru #Karnataka pic.twitter.com/aT8uexK5yS
— TIMES NOW (@TimesNow) May 2, 2025
இந்த சம்பவத்துக்குப் பிறகு பொதுமக்கள் ஆத்திரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரான சிரஞ்சீவ் மீது தாக்குதல் நடத்தினர். இது குறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் “ஆம்புலன்ஸின் பிரேக் வேலை செய்யவில்லை” என சிரஞ்சீவ் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
விபத்து தொடர்பாக வில்சன் கார்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்புலன்ஸ் பராமரிப்பு, ஓட்டுநரின் அலட்சியம், மற்றும் வாகன பராமரிப்பு குறைபாடுகள் என பல்வேறு விதமான கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!