பகீர் வீடியோ... முதலையின் வாய்க்குள் காலை விட முயற்சிக்கும் இளம்பெண்!

சமூக வலைதளங்களில் தினமும் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில் ஒரு பெண்மணி முதலையின் வாய்க்குள் கால் விடுவது போன்று தற்போது ஒரு வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு நீர்நிலையில் முதலை ஒன்று இருக்கும் நிலையில் ஒரு இளம் பெண் கயிறு கட்டி முதலையின் மேல் அங்கும் இங்குமாக பறந்து பறந்து செல்கிறார்.
— out of context brazil 🇧🇷 (@oocbrazill) May 1, 2025
தன்னுடைய காலை முதலையின் அருகே அதாவது வாய்க்கு அருகே கொண்டு செல்வது போல் அந்த பெண் சாகசம் செய்வதை காணமுடிகிறது. ஆனால் அந்த முதலை அசையாமல் ஒரே இடத்தில் இருந்தது. இருப்பினும் இதுபோன்ற சாகசங்கள் ஆபத்தை விளைவிக்கலாம்.
ஏனெனில் திடீரென முதலை காலை பிடித்து கவ்வி விட்டால் அந்த பெண் என்ன செய்வார் எனப் பலரும் கூறி வருகின்றனர். மேலும் அந்த பெண்ணின் சாகச வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!