பகீர் வீடியோ... ரயில் நிலையத்தில் பயணியின் கழுத்தை இறுக்கி, கொடூரமாக தாக்கிய கடைக்காரர்!

இந்திய ரயில்களில் தண்ணீர், தேநீர், காபி இவைகளுக்கு அதிக விலை வசூலிக்கப்படுவது குறித்து பயணிகள் அடிக்கடி புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பரேலி ரயில்வே நிலையத்தில், ஒரு பயணி தேநீர் விலை அதிகமாக இருப்பது குறித்துக் கடைக்காரரிடம் புகார் கூறியுள்ளார்.
#बरेली जंक्शन के प्लेटफॉर्म नंबर 1 पर खराब चाय की शिकायत करना एक यात्री को महंगा पड़ गया। चाय विक्रेता ने शिकायत करने पर ग्राहक के साथ मारपीट कर दी। मारपीट का वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है। वायरल वीडियो के आधार पर जीआरपी ने मामले की जांच शुरू कर दी है। @RailMinIndia pic.twitter.com/w9dIqdQx8C
— Aman Kumar (@akaykumar25) May 8, 2025
இதனையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டு, கடைக்காரர் பயணியை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பிளாட்பார்ம் எண் 1-ல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை @akaykumar25 என்ற பயனர் X தளத்தில் பகிர, “மோசமான தேநீர் விலை குறித்து புகார் அளித்த பயணியை கடைக்காரர் தாக்கியுள்ளார்” என பதிவு செய்துள்ளார். 17 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஜிஆர்பி (ரயில்வே காவல்துறை) சம்பவம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோன்று மே 7 அன்று ஹேம்குந்த் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பயணியை பாண்ட்ரி ஊழியர்கள் தாக்கிய வீடியோவும் சமீபத்தில் வெளியானதை மக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பதிவிட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!