வெடி விபத்தில் குலுங்கிய கிராமம்... கிணற்றுக்குள் சிக்கிய தொழிலாளர்கள்.. 3 பேர் பலி!

 
வெடி

தென்காசி ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் பால் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. பால் தனது தோட்டத்தில் கிணறு வெட்ட முடிவெடுத்துள்ளார். இதற்காக அப்பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரை அணுகியுள்ளார். அவரிடம் ஒப்பந்த அடிப்படையில் கிணறு வெட்டும் பணியை ஒப்படைத்தார். 

இதனையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 10 தினங்களாக கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து இன்று பாறைகளை தகர்க்க டெட்டனேட்டர்களை பயன்படுத்தி வெடி வைக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடி வெடித்தது. 

வெடி

இதில் அங்கு பணியில் இருந்த 4 பேரில் ஆனையப்பபுரம் கிராமத்தை சேர்ந்த அரவிந்த்(21 ) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு ஆசிர் சாம்சன் (22) வயது தொழிலாளியும் பலியானார். இதையடுத்து காயம் அடைந்த மற்ற இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிணறு வெட்ட முயன்றபோது எதிர்பாராத விதமாக வெடி வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெடி

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாலி ராஜலிங்கம் என்பரும் உயிரிழந்துள்ளார். இதனால் தற்போது பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web