தினமும் குடித்து டார்ச்சர் செய்த கணவன்.. ஆத்திரத்தில் கொலை செய்து விட்டு போலீசிடம் சரணடைந்த மனைவி..!!

 
ராஜேந்திரன்

குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவனை கொலை செய்து மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி ராஜகுளத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40), வெளி மாநிலங்களுக்கு செல்லும் டிப்பர் லாரிகளை ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி பாண்டீஸ்வரி (33) என்ற மனைவியும், 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரன், 24 மணி நேரமும் குடிபோதையில் இருந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நத்தம்: மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து  மாற்றம் - நத்தம் காவல் துறையினர் அறிவிப்பு|Inshorts

கடந்த 3 நாட்களாக கடும் போதையில் இருந்த ராஜேந்திரன், மது வாங்க பணம் கேட்டு மனைவியை துன்புறுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை ராஜேந்திரன் தனது மனைவியை அரிவாளால் தாக்க முயன்ற போது, ​​மனைவி பாண்டீஸ்வரி தன்னை தற்காத்துக் கொள்ள கத்தியை எடுத்து கணவரை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மது போதையில் தகராறு செய்த கணவரை கொலை செய்த மனைவி!

நத்தம் காவல் நிலையத்தில் கொலையாளி பாண்டீஸ்வரி சரணடைந்தார். நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web