கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனைக் கொன்று நாடகமாடிய மனைவி! திருத்தணி அருகே கொடூரம்!

 
காயத்ரி

திருத்தணியருகே, கள்ளக் காதலனோடு சேர்ந்து, கட்டிய கணவனைக் கொன்று விட்டு, எதுவும் தெரியாததைப் போல நாடகமாடிய மனைவியை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சுந்தர ராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் யுவராஜ்.  இந்நிலையில், தனது மகன் யுவராஜ் மர்மமான முறையில் இறந்துள்ளதாக யுவராஜின் தந்தை ஆறுமுகம் ஆர்.கே. பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆறுமுகத்தின் புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், யுவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, யுவராஜின் மரணம் குறித்து விசாரணையை தொடங்கினர்.

போலீசாரின் விசாரணையில், யுவராஜின் மனைவி காயத்ரி, காயத்ரியின் கள்ளக்காதலனும், அவனுடைய நண்பர்களும் ஒன்று சேர்ந்து யுவராஜைக் கொலைச் செய்தது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் ஆதாரங்களுக்காக காயத்ரியின் செல்போனை வைத்து, போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டனர். அதில் காயத்ரி திருத்தணி ஆகூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் கள்ளதொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்தது. திருமணத்திற்கு முன்பிருந்தே காயத்ரி, சீனிவாசனை காதலித்து வந்துள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

murder

சென்னையில் இருவரும் ஒரே மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த பிரிவில் படித்து வந்த போதே காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் காயத்ரியின் வீட்டிற்கு தெரிய வரவே அதே கிராமத்தைச் சேர்ந்த உறவுக்கார பையனான யுவராஜிக்கு காயத்ரியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையிலும் முன்னாள் காதலன் சீனிவாசனுடன் காயத்ரி தொடர்ந்து கள்ள தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதற்காக திருத்தணியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் செவிலியராக காயத்ரியும், ரத்த சார்ந்த பிரிவில் சீனிவாசனும் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இவர்களது கள்ளக்காதல் தொடர்வதை அறிந்து காயத்ரியின் கணவர் யுவராஜ் இனி வேலைக்கு செல்லக் கூடாது என கூறியுள்ளார். இந்த தகவலை கள்ளகாதலன் சீனிவாசனிடம் காயத்ரி செல்போனில் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து சீனிவாசன் அவர்களது நண்பர்களான திருத்தணி பெரியார் நகரைச் சார்ந்த மணிகண்டன் மற்றும் ஏமநாதன் ஆகியோரை துணைக்கு அழைத்துக் கொண்டு யுவராஜ் வீட்டில் இருக்கும் பொழுதே தகராறு செய்துள்ளனர்.

RK Pet PS

பின்னர் சீனிவாசன் மற்றும் அவர்களது நண்பர்கள் மூவரும் யுவராஜ் இடம் தகராறு செய்த நிலையில், காயத்ரி யுவராஜின் மார்பு மீது ஏறி அமர்ந்து கொண்டும் மற்ற இருவரும், யுவராஜின் கை மற்றும் கால்களை பிடித்து கொள்ள காயத்ரி, யுவராஜின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் திருத்தணியில் பதுங்கி இருந்த மணிகண்டன், ஏமநாதனையும் ஸ்ரீபெரும்புதூரில் பதுங்கி இருந்த காயத்ரியின் கள்ளக்காதலன் சீனிவாசனை கைது செய்தனர். இந்நிலையில் விஷம் குடித்ததாகவும், கையை அறுத்துக் கொண்டதாகவும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காயத்ரியை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web