சாகசம்!! முதலையிடம் இருந்து கணவனை காப்பாற்றிய மனைவி!!
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்பது அந்த காலத்து பழமொழி என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். தாசி வீட்டுக்கு கணவனை சுமந்து சென்ற மனைவி என புராணங்களில் தான் படித்திருக்கிறோம். தற்கால வாழ்க்கையிலும் கணவனுக்காக தன் உயிரை பணயம் வைத்து முதலையிடமிருந்து கணவனை காப்பாற்றியுள்ளார். ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கரவுலி மாவட்டத்தில் பன்னே சிங் என்ற நபர் தனது மனைவி விமல் பாயுடன் வசித்து வருகிறார்.
பன்னே சிங் ஆடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஏப்ரல் 11ம் தேதி செவ்வாய்க்கிழமை பன்னே சிங்கும் அவரது மனைவியும் மேய்ச்சலை முடித்ததும் ஆடுகளுக்கு தண்ணீர் காட்ட அருகில் இருந்த ஆற்றில் இறங்கினர். வழக்கம் போல் ஆற்றில் இறங்கிய பன்னேசிங்கை திடீரென ஒரு முதலை வந்து அவரது காலை கடித்து தண்ணீருக்குள் இழுத்து சென்று விட்டது. அவரின் அலறல் சத்தம் கேட்டு தொலைவில் இருந்த விமல் பாய் ஓடி வந்தார். முதலையிடமிருந்து கணவனை எப்படியாவது காக்க வேண்டும் என்ற வேகம் உருவானது. அருகில் இருந்த தடியை எடுத்து முதலையை சராமாரியாக குத்த தொடங்கினார்.
ஆனாலும், முதலை விடவில்லை. இன்னும் தண்ணிருக்கு உள்ளே இழுத்து சென்றது. மேலும் வேகத்துடன் விமல் பாய் முதலையின் கண்ணில் குச்சியால் குத்தினார். இதனால், முதலை தனது பிடியை விட்டு பன்னே சிங்கின் காலை விடுவித்தது.இதையடுத்து கணவன், மனைவி இருவரும் பத்திரமாக கரைக்கு வந்தனர். தனது கணவரை முதலை கடித்தபோது, தன் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவில்லை அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்ததாக விமல்பாய் தெரிவித்துள்ளார். தற்போது விமல் பாயின் இந்த அர்ப்பணிப்பும், தைரியமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விமல் பாயின் சாகசத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!