9 மாதங்களாக கர்ப்பமாக இருந்த பெண்... அடுத்தடுத்து செய்த அதிர்ச்சி சம்பவங்கள்!
தான் கர்ப்பமாக இருப்பதாக 9 மாதங்களாக கணவரை ஏமாற்றி வந்த இளம்பெண் ஒருவர், அதன் பின்னர் தான் சொன்ன பொய்யை உண்மையாக்குவதற்காக மருத்துவமனையில் இருந்து குழந்தையைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை ஒன்று காணாமல் போனதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மருத்துவமனையில் தீவிர விசாரணை நடத்தினர். மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவர் சுற்றித் திரிந்தது பதிவாகியிருந்து.
துப்பாட்டாவால் முகத்தை மறைத்திருந்த அந்த பெண், பிரசவ வார்டுகளுக்கு அருகில் சுற்றித் திரிவதும், பலரிடம் பேசுவதுமாக இருந்தார். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த பெண்ணின் வீட்டை கண்டுபிடித்து அங்குச் சென்று பார்த்தனர். அப்போது அந்த பெண் காணாமல் போன குழந்தையுடன் இருந்ததை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தெற்கு டெல்லியைச் சேர்ந்த பூஜா தேவி (27), தனது திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையிலும் குழந்தை பிறக்காததால் விரக்தியடைந்த நிலையில், கணவர் உட்பட தனது குடும்பத்தினரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக பூஜா தெரிவித்துள்ளார். இப்படியே 9 மாதங்களைக் கடத்திய அவர், பின்னர் தலைபிரசவத்திற்காக தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்று விட்டார்.
அதனைத் தொடர்ந்து, சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு சென்று, அங்கிருந்து ஒரு குழந்தையை கடத்திச் சென்று, அந்த குழந்தை தனக்கு பிறந்ததாக கூறி கணவரின் வீட்டாரை நம்ப வைத்துள்ளார்.
பூஜாவின் இந்த திட்டம் குறித்து அவரது கணவருக்கும், குடும்பத்தினருக்கும் எதுவும் தெரியாது என்பது தெரியவந்தது. கடத்தப்பட்ட குழந்தை மீண்டும் தனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பூஜா தற்போது போலீஸ் காவலில் இருந்து வருகிறார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!