அரசு மருத்துவமனையில் ஹேண்ட் பேக்கில் வைத்து குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்.. சுற்றி வளைத்த போலீசார்!

 
குழந்தை கடத்தல் சத்யா

பணத்துக்காக பெண்கள் குழந்தைகளைக் கடத்திச் செல்லும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 7 நாளே ஆன குழந்தையைக் ஹேண்ட் பேக்குக்குள் வைத்து கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் செரங்காட்டையைச் சேர்ந்தவர் கோபி (30). இவரது மனைவி சத்யா (28). நிறைமாத கர்ப்பிணியான சத்யா, திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்,  பிரசவத்திற்காக கடந்த 18-ம் தேதி  அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மார்ச் 19ம் தேதி சத்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து கோபி வெளியே சென்று விட்டார். 

குழந்தையுடன் இருந்த சத்யா சிறிது நேரம் தூங்கியுள்ளார். தூங்கி எழுந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. தகவல் அறிந்து திருப்பூர் தெற்கு போலீசார் வந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

baby

இந்த நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட 7 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை 12 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர். குழந்தையை கடத்திய பெண் பாண்டியம்மாள் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருமணமாகி பல ஆண்டுகளாகியும், குழந்தை இல்லாத காரணத்தால் குழந்தையை கடத்தியதாக கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் பாண்டியம்மாள் 9 மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தற்போது பிரசவத்திற்கு மருத்துவமனை செல்வதுபோல நடித்து குழந்தையை திருடி சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

women-arrest

கடத்தப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட குழந்தைக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web