2026 வருஷ ஆரம்பமே அமர்க்களம்... தேர்வு கிடையாது... 10வது முடிச்சிருந்தா போதும்... அஞ்சல் துறையில் 30,000 காலி பணியிடங்கள்!
இந்திய அஞ்சல் துறையில் 'கிராம அஞ்சல் சேவகர்' (GDS) பணிக்கான 2026-ஆம் ஆண்டுக்கான முதல் கட்ட அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
2026 ஜனவரி 15-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 30,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நாடு முழுவதும் நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளை போஸ்ட் மாஸ்டர் (Branch Post Master - BPM), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Assistant Branch Post Master - ABPM), தபால்காரர் / கிராம அஞ்சல் பணியாளர் (Dak Sevak)

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் தேர்ச்சி அவசியம்.
வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை (அரசு விதிகளின்படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு).
கூடுதல் தகுதிகள்: உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
