நெகிழ்ச்சி வீடியோ... பக்கெட்டில் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தையை துரிதமாய் ஓடிச் சென்று காப்பாற்றிய போலீசார்!

 
குழந்தை

கேரள மாநிலம் ஆறன்முள பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், தனியார் மருத்துவமனையில் அதிக ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அப்போது அவரது ரத்தப்போக்கு காரணம் அறிந்த மருத்துவர்கள் விவரத்தை கேட்டனர்.

அப்போது அப்பெண், தனக்கு குறை மாதத்தில் குழந்தை பிறந்து இறந்துவிட்டதால் கழிவறையில் வீசிவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக செங்கன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் உடனடியாக பெண்ணின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது குழந்தை வாளிக்குள் துணியால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அதனை எடுத்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த நேரத்தில் குழந்தை அழுக தொடங்கியது. குழந்தை உயிரோடு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக வாளியோடு சேர்த்து குழந்தையை தூக்கி சென்று ஓடோடி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். தொடர்ந்து அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சை நடைபெற்று வருகிறது.

மேலும், குழந்தையை பாதுகாக்க குழந்தைகள் நலத்துறைக்கு அரசு உத்தரவிட்டது. ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக அப்பெண் கூறியதால் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, விசாரணையில் கள்ளக்காதல் உறவால் குழந்தை பிறந்ததால் வீட்டிலேயே பிரசவித்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. 

குழந்தை

இதையடுத்து போலீசார் குழந்தையை போட்டு வந்த பெண் மற்றும் அவரின் தாயார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாளிக்குள் உயிருடன் இருந்த பிஞ்சு குழந்தையை விரைந்து சென்று காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web