காதலனைப் பார்க்க கனடாவிலிருந்து வந்த இளம்பெண் மரணம்... காதலனால் நேர்ந்த கொடூரம்!

 
நீலம்

காதலனைச் சந்தித்து, திருமணம் செய்து கொள்வதற்காக கனடாவில் இருந்து ஆசையாசையாக இந்தியா கிளம்பி வந்த இளம்பெண்ணைக் காதலனே கொன்று புதைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலனைப் பார்ப்பதற்காக இந்தியா சென்ற தங்களது மகளைக் காணவில்லை என்று கடந்த 6 மாதங்களாக குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், மகள் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்தனர். 

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் நீலம். 23 வயதான நீலம், ஆங்கில புலமைக்கான சர்வதேச தேர்வில் வெற்றி பெற்று கனடா நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரியில் நீலம் இந்தியாவுக்கு வந்து உள்ளார். ஆனால், அதன் பின்னர் அவரை பற்றிய தகவல் குடும்பத்தினருக்கு தெரியவரவில்லை.  இது குறித்து போலீசாரிடம் தெரிவித்தும் எந்தவித பலனும் கிடைக்காத நிலையில், நீலம் குடும்பத்தினர் அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ்ஜை நேரில் சந்தித்து விசாரணையை விரைவுப்படுத்த உத்தரவிட கோரினர். இளம்பெண் நீலமின் சகோதரியும் கடந்த ஜூன் இறுதியில் போலீசில் புகார் அளித்து உள்ளார். 

Haryana

இந்த வழக்கு பின்பு பிவானியில் உள்ள சி.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை செய்து, சுனில் என்பவரை கைது செய்து காவலில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நீலம் மற்றும் சுனில் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து உள்ளனர். சுனில் அழைத்ததன் பேரில் நீலம் கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவுக்கு வந்து உள்ளார். அவருடன் சுனில் ஒன்றாக சுற்றியுள்ளார்.

எனினும், கடந்த ஆண்டு ஜூனில், ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுனில் துப்பாக்கியால் 2 முறை சுட்டதில், தலையில் பலத்த காயம் அடைந்து நீலம் உயிரிழந்துள்ளார். அதன்பின் தடயங்களை அழிக்கும் முயற்சியில் சுனில் ஈடுபட்டுள்ளார். அவரது வயலில் நீலமின் உயிரற்ற உடலை சுனில் புதைத்து விட்டார். அதனை மீட்டுள்ள சி.ஐ.ஏ., சோனிபத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். 

Police-arrest

நீலமின் தாயார் உதவியுடன் மரபணு சோதனை நடைபெற உள்ளது. சுனில் கடந்த காலங்களில் கொலை மற்றும் சட்டவிரோத வகையில் கைத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருத்தல் உள்பட பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்து உள்ளார் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுபற்றிய விவரம் எதுவும் அறியாமல் சுனிலை காதலித்து, அவரையே திருமணம் செய்வதற்காக கனடாவில் இருந்து இந்தியா திரும்பிய இளம்பெண் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகம் ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web