நண்பனைக் காப்பாற்ற தண்டவாளத்தில் ஓடிய இளைஞர்... ரயிலில் அடிபட்டு பலியான சோகம்!
திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் தனது நண்பன் ஆசைத் தம்பியை வழி அனுப்பி வைக்க அவரது நண்பர்கள் 4 பேர் சென்னை வந்திருந்தனர். பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் விமான நிலையத்திற்கு சென்றனர்.
அப்போது, மாம்பலம் மற்றும் சைதாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு இடையே ரயில் சென்ற போது ஆசைத்தம்பி திடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கவுதம் மற்றும் நண்பர்கள், ரயில் சைதாப்பேட்டை வந்ததும் இறங்கி அவரை காப்பாற்ற தண்டவாளத்திலேயே ஓடிச் சென்றனர்.
அப்போது கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் கவுதம் மீது மோதியது. இதனால் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து ஆசைத்தம்பி காயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரயில் தவறி விழுந்த நண்பரை காப்பாற்றச் சென்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!