பள்ளி மாணவர்களின் தகவல்கள் திருட்டு!! கலக்கத்தில் கல்வித்துறை!!
தமிழகம் முழுவதும் பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண்கள் குறித்த தகவல்கள் பள்ளிக்கல்வித்துறையில் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தரும் செய்தி வெளியானது.இந்த ஆடியோ விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அதிகாரி புண்ணியகோடி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்
புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து மத்திய குற்றப் பிரிவின் சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்களின் விவரங்களை திருடி கல்லூரிகளுக்கு விற்கும் கும்பல் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
. இந்நிலையில், பள்ளி மாணவர்களின் விவரம் திருடப்பட்ட சம்பவம் குறித்து 3 பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்துள்ளனர். மோசடி, தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!