அப்பப்போ.. தனிமையில் சந்தோஷம்.. திருமணத்துக்கு மறுத்த காதலன்! காதலி செய்த அதிர்ச்சியான சம்பவம்!

 
கடத்தல் காதலி தனிமை கொலை

காதலுக்கு கண் இல்லைன்னு மட்டும் தான் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.. ஆனா, காதலைக் காப்பாற்ற கற்பையும் காலி செய்வார்கள் என்று புலம்பி வருகிறார்கள் போலீசார். என்ன மேட்டர்ன்னு படிச்சீங்கன்னா விஷயம் அத்தனை சீரியஸ் கிடையாது தான். ஆனா, அந்த பெண் சொன்ன பொய், பல போலீசாரின் தூக்கத்தைக் கெடுத்து, விடிய விடிய வேலைப் பார்த்து, அத்தனை  மன அழுத்தத்தில் விசாரணையில் இறங்கி.. கடைசியில் எல்லாமே பொய்ய்ய்யா... கோபாஆஆஆஆல் ரேஞ்ச்சில் கலகலவென அத்தனைப் போலீசாரையும் சுற்ற வைத்திருக்கிறார் இளம்பெண் ஒருவர். ஆமாம்... தன்னுடன் பல நாட்களாக உறவு கொண்டு சந்தோஷமாக இருந்து விட்டு, திருமணம் செய்து கொள்ள மறுக்கும் காதலனை, போலீசாரிடம் சிக்க வைப்பதற்காக, தன்னை 4 பேர் காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக நாடகமாடி இருக்கிறார் இளம்பெண்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் பிரேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சென்னை சைதாப்பேட்டையில் தங்கியிருந்து, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், காஞ்சிபுரத்தை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் நேற்றிரவு சுமார் 2 மணியளவில் கிருஷ்ணவேனி என்பவரின் வீட்டு கதவை தட்டிய பிரேமா, தன்னை 4 பேர் கொண்ட கும்பல் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து காரில் கடத்தி வந்து, மாம்பாக்கம் பகுதியில் சாலவாக்கத்தில் வைத்து கற்பழித்து விட்டு, தப்பியோடியதாகவும் கூறி, தனக்கு உதவுமாறு கூறியிருந்தார். பின்னர் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

rape

பிரேமாவின் புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பிரேமாவை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும், பரிசோதனைக்காகவும் அனுமதித்தனர். தொடர்ந்து, பிரேமாவைக் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது யார்? என்று போலீசார் தீவிர விசாரணையை நடத்தினர். இதனைத் தொடர்ந்து தன்னை காரில் கடத்தியதாக பிரேமா கூறிய நிலையில் செங்கல்பட்டு நகரில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

சிசிடிவி காட்சிகளில், பிரேமா இளைஞர் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் ஏறி செல்வது பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து பிரேமாவின்  மேல் சந்தேகமடைந்த போலீசார், கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பிரேமாவுக்கும் உத்திரமேரூரை அடுத்த மலையான் குளத்தைச் சேர்ந்த சலீம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து சந்தோஷமாக இருந்து வந்துள்ளனர். 

Chengalpattu Town PS

அதே போல் நேற்றும் பிரேமாவும், சலீமும் தனிமையில் சந்திக்க மாம்பாக்கம் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் தனிமையில் சந்தோஷமாக இருந்துள்ளனர். பின்னர், தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி சலீமிடம் பிரேமா கேட்டுள்ளார். திருமணம் செய்து கொள்ள சலீம் மறுக்கவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சலீம், ஆத்திரத்தை பிரேமாவைத் தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். 

இதனால், தன்னுடன் தனிமையில் இருந்து விட்டு திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலனை சிக்க வைக்க திட்டம் தீட்டிய பிரேமா, தன்னை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி கற்பழித்ததாக நாடகமாடியுள்ளார். இதனைத் தொடர்ந்துசலீம் என்பவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web