அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை... பெற்றோருடன் அமர்ந்து மாணவர்கள் சாலை மறியல்!
அரசு நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி பெற்றோர்களுடன், பள்ளி மாணவ மாணவிகளும், ஆசிரியைகளும் சாலை அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடரும் சாலை மறியலால் கல்லட்டி மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த கல்லட்டி பகுதியில் பல கிராமங்கள் உள்ளன இந்த கிராம மக்களுக்காக சோலார் என்னும் இடத்தில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது இந்த பள்ளியில் 91 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி பெற்றோர்கள் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் திடீரென இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் பல ஆண்டுகளாக உள்ள இந்த பள்ளியில் கழிப்பிட வசதி விளையாட்டு திடல் வசதி உட்பட்ட அடிப்படை வசதிகள் இன்றி இத்தனை ஆண்டுகள் பள்ளிக்கு சென்று வந்துள்ளதாகவும் தற்போது மழைக்காலம் நெருங்கி உள்ளதால் மேலும் அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் உடனடியாக பள்ளியை சீரமைக்க வேண்டும் என கூறினர்.

திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவ மாணவிகளால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
