திருச்சியில் பரபரப்பு... திமுக எம்.பி.யின் வீட்டில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல்!

 
நேரு

பல நாட்கள் தூங்கி எழுந்திருக்கும் போது கூட பயத்தோடும், கவலையோடும் தான் எழுந்திருக்கிறேன் என்று தமிழக  முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாகவே சொன்ன பிறகும் திமுக தொண்டர்கள் அடங்குவதாக இல்லை. அராஜகம் என்றால் எங்களுக்கு புதுசா என்கிற அளவில் தான் அவர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முதல்வர் ஸ்டாலினுக்கு மீண்டும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் நேரு ஆதரவாளர்கள்.

அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பது போல திருச்சி என்றால் நேரு தான் என்பது திமுகவில் எழுதப்படாத விதி. திருச்சியில் திமுக எம்பி சிவா வீட்டில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் இன்று திடீரென புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ். பி. ஐ., காலனியில் நமக்கு நாமே திட்டத்தில், நவீன இறகு பந்து உள்விளையாட்டு அரங்கத்தை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு  குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். 

திருச்சி சிவா

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார்,  நகர பொறியாளர் சிவபாதம்,  மண்டல தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்பவர்கள் பட்டியலில் ராஜ்யசபா எம்.பி., சிவாவின் பெயர் இடம் பெறவில்லை. ஆனால், அவரது வீடு உள் நியூ ராஜா காலனி வழியாக தான், அந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் நேரு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சென்றுள்ளனர்.

அரசு திட்டத்தில் விளையாட்டு அரங்கம் துவக்க விழாவில்,  ராஜ்யசபா எம்பியான சிவாவுக்கு அழைப்பு விடுக்காதது அவரது  ஆதரவாளர்கள் தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால், அமைச்சர்  மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்ற போது, சிவாவின் ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி காட்டி உள்ளனர். இருப்பினும், அமைச்சரும் அவருடன் சென்றவர்களும் கார்களை நிறுத்தாமல் சென்று விட்டனர். 

திருச்சி சிவா வீடு

இறகுப் பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா முடிந்து, அமைச்சர் புறப்பட்டு சென்றதும், அவரோடு வந்த ஆதரவாளர்கள் எம்பி சிவாவின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கார் மற்றும் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். 

சம்பவம் குறித்து  தகவல் அறிந்த கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் உட்பட ஆதரவாளர்கள் 10 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். திருச்சியில் திமுக எம்பி வீட்டில் திமுக அமைச்சரின் ஆதரவாளர்களே புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web