தேர்வு கிடையாது... தெற்கு ரயில்வேயில் 1,785 காலி பணியிடங்கள்.. முழு விபரம்!

 
ரயில்வே

தெற்கு ரயில்வேயில் (Southern Railway) அப்ரண்ட்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கான (Apprentices) 1785 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எழுத்துத் தேர்வு எழுதத் தேவையில்லை; மெரிட் பட்டியல் (Merit List) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மத்திய அரசு வேலையை எதிர்நோக்கியிருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

முக்கிய விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை

தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பின்படி, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு (Divisions) மொத்தமாக 1785 அப்ரண்ட்டிஸ் காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் செயல்முறை நவம்பர் 18, 2025 அன்று தொடங்கி விட்டது. விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வலர்கள் டிசம்பர் 17, 2025ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பயிற்சிப் பணிகளுக்கான ஊதியம், அப்ரண்ட்டிஸ் விதிகள் மற்றும் நெறிமுறைகளின் (As Per Apprentice Norms) அடிப்படையில் வழங்கப்படும்.

ரயில் தண்டவாளம் ரயில்வே பராமரிப்பு

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

இந்தப் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் (Recognized Board) 10+2 தேர்வு முறையில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் மெட்ரிகுலேஷன் (10-ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், சம்பந்தப்பட்ட ட்ரேடில் (Trade) தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் (NCVT) அல்லது மாநில தொழிற்பயிற்சி கவுன்சில் (SCVT) வழங்கிய ஐ.டி.ஐ. (ITI) தேர்ச்சிச் சான்றிதழ் பெற்றிருப்பது கட்டாயமாகும். வயது வரம்பைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

வயது மற்றும் விண்ணப்பக் கட்டணச் சலுகைகள்

அரசு விதிகளின்படி, சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, SC/ ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) 10 முதல் 15 ஆண்டுகள் வரையும் வயதுத் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம், அனைத்துப் பிரிவினருக்கும் ₹100/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், SC/ST, PWD மற்றும் பெண்கள் ஆகிய பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் இருந்து முழுமையாக விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறை வேலை வாய்ப்பு ரயில்

தேர்வு செய்யும் முறை

இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பது மிக முக்கிய அம்சமாகும். விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட இரண்டு படிகளின் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:

மெரிட் பட்டியல் (Merit List): கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் முதலில் ஒரு தரவரிசைப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification): மெரிட் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, இறுதிப் பணி நியமனம் வழங்கப்படும்.

எனவே தகுதியுடைய இளைஞர்கள் இந்த மத்திய அரசுப் பயிற்சி வாய்ப்பைப் பயன்படுத்தி, ரயில்வே துறையில் தங்களின் பணியைத் தொடங்கலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!