தமிழ்நாடு அரசுடன் எந்த மோதலும் இல்லை… ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழகத்தில் 25 , 26 தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் ஆளுநர் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த மாநாட்டில் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில் அரசுடன் அதிகாரம் மோதலுக்காக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பும் இதுவும் தவறாக தொடர்புப்படுத்தப்படுகிறது.
2022 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஏப்ரலிலும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. எதிர்வரும் மாநாட்டுக்கான பணிகள் கடந்த ஜனவரி மாதத்திலேயே தொடங்கிவிட்டது என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!