10 கிணறு தோண்டி தண்ணியே வரல... வாடத் தொடங்கிய பயிரை கண்டு விவசாயி குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை!
May 5, 2025, 13:20 IST

தெலங்கானா மாநிலத்தில் நிஜாமாபாத் அருகேயுள்ள காமரெட்டி மாவட்டம், தோமாகொண்ட மண்டலத்தில் சங்கமேஸ்வர் கிராமத்தில் வசித்து வருபவர் பென்டய்யா . 26 வயதாகும் இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார். நீரின் பற்றாக்குறையால் பயிர்கள் கண்ணம்முன் வாடல் தொடங்கிவிட்டன. இதனை தாங்க முடியாமல் பெண்டய்யா தற்கொலை செய்து கொண்டார்.
சுமார் 2.5 ஏக்கர் நிலத்தில் நெல் மற்றும் சோளத்தை சாகுபடி செய்த பென்டய்யா, பசுமை பயிர்களுக்கு நீரை வழங்க பலமுறை முயற்சி செய்துள்ளார். இதற்காக அவர் 10 டிரில் கிணறுகள் தோண்டினார். ஆனால் அவையெல்லாம் தோல்வியடைந்துவிட்டன.
தோண்டிய எல்லா கிணறுகளிலும் தண்ணீர் இல்லாத நிலையில், வாடிய பயிர்களை கண்டு கலங்கிய நிலையில் பென்டய்யா குடும்பத்தினர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இச்சம்பவம் உள்ளூர் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?
From
around the
web