மருத்துவரை கட்டி போட்டு கத்தியால் குத்தி 100 சவரன் நகை கொள்ளை!! அதிர வைக்கும் பிண்ணனி!!

 
ரேவதி

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உதயகுமார்- ரேவதி (50) தம்பதி வசித்து வருகின்றனர். இதில் உதயகுமார் திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் உள்ளார். மகள் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வரும் நிலையில், அவரை பார்க்க அவரது ரேவதி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னைக்கு சென்று விட்டார்.

வீட்டில் உதயகுமார் தனியாக இருந்துள்ளளார். இந்நிலையில் அதிகாலையில் உறங்கிக் கொண்டிருந்தபோது முகமூடி அணிந்த 3 பேர் அவரைக் தட்டி எழுப்பினர். அதிர்ந்து எழுந்த அவர் கூச்சலிட்டப்போது, முகமூடி நபர்கள் கத்தியால் தாக்கி அவரை சேரில் வைத்து கட்டிப் போட்டனர். அவரிடம் இருந்த செல்போனையும் பறித்துக் கொண்டு கத்தியால் குத்தி பீரோ சாவியை பறித்தனர்.

ரேவதி

பின்னர் உதயகுமாரின் வீட்டிலிருந்த 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துக் கொண்டு கும்பல் தப்பிச்சென்றது.இதன் பின்னர் மருத்துவர் உதயகுமார் கூச்சலிட்டதை அடுத்து அங்கு வந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அவரை வீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவரின் வீட்டிற்கு வந்து தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

ரேவதி

அரசு தலைமை மருத்துவரை தாக்கி கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த மருத்துவர் உதயகுமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவரது வீட்டின் அருகே பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடனும் கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web