திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ மாரிமுத்துவின் தாயார் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்!
திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ., மாரிமுத்துவின் தாயார் தங்கம்மாள், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர்.
இவரது மகன் க. மாரிமுத்து, திருத்துறைப்பூண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினராகவும், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
தங்கம்மாளின் மறைவுச் செய்தி கேட்டதும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் காடுவாக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் திரண்டு அஞ்சலி செலுத்தினர். அன்னாரது இறுதிச்சடங்குகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் அவரது இல்லத்தில் முறைப்படி நடைபெற்று முடிந்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
