இன்று திருவண்ணாமலை கோவில் தேர் வெள்ளோட்டம்!

 
திருவண்ணாமலை

 திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா  ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா  டிசம்பர் 1ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.  4ம் தேதியன்று கொடியேற்றமும், 10ம் தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும், 13ம் தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

திருவண்ணாமலை

 

இந்த விழாவிற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனையொட்டி அருணாசலேஸ்வரர் தேர் ரூ.70 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த தேர் வெள்ளோட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அரோகரா முழக்கத்துடன் பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் தேரை இழுத்துச் செல்கின்றனர்  

திருவண்ணாமலை

சூரிய வழிபாடு செய்ய நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள் அருணாசலேஸ்வரர் தேர் 59 அடி உயரமும், 200 டன் எடையும் கொண்டதாகும். இதில் தேவாசனம், நராசனம், சிம்மாசனம் அலங்கார தூண்களில் உள்ள பழுதடைந்தவைகள் மாற்றப்பட்டு உள்ளது. 4 கொடுங்கை நிலைகளும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் தேரில் அமைக்கப்பட்டு உள்ள பிரம்மா மற்றும் துவார பாலகர் சிலைகளும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!