இதுவரை பொங்கல் டோக்கன் வாங்காதவர்கள் இந்த தேதியில் ரேஷன் கடையில் வாங்கிக்கோங்க!
தமிழகம் முழுவதும் வீடு வீடாக பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன்கள் விநியோகிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் பெறாதவர்கள் வரும் ஜனவரி 13ம் தேதி நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று பரிசுத் தொகுப்பையும் ரொக்கத்தையும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்கள். பல மாவட்டங்களில் அமைச்சர்கள் பொங்கல் பரிசு வழங்கலை தொடக்கி வைத்தனர். சில இடங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தற்காலிகமாக விநியோகம் நிறுத்தப்பட்டு, பின்னர் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
