சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர்கள் மீது குண்டர் சட்டம்!

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ் எடுத்ததாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் சித்ரா என்பவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யூடியூப் திவ்யா, கார்த்திக் ஆனந்த், சித்ரா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சித்ரா, திவ்யா இருவரும் விருதுநகர் சிறைச்சாலையிலும், கார்த்திக் ஆனந்த் இருவரும் மதுரை சிறைச்சாலையிலும் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திவ்யா, கார்த்தி மற்றும் சித்ரா ஆகிய 3 பேர் மீதும் தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருப்பதாக கைது செய்யப்பட்டு யூடியூபர்கள் திவ்யா, கார்த்திக் மற்றும் சித்ரா ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!