திக் திக் வீடியோ... பனிப்பாறையில் சாகசம் செய்த ஆராய்ச்சியாளர்கள் ... உடைந்து கடலில் விழுந்த விபரீதம்.!

உலகைச் சுற்றி பெருங்கடல்கள் அமைந்துள்ள நிலையில் அதில் பனிப்பாறைகள் உடைந்து அவ்வபோது மிதந்து வருவதுண்டு. நாம் பார்க்கும் போது நம்மை தொட்டுச் செல்லும் அலைகளை போல் அழகாகத் தெரியும் கடல் பல அபாயங்களை தன்னுள்ளே மறைத்து கொண்டுள்ளது. அந்த வகையில் சமீபத்தில், ஆர்க்டிக் பெருங்கடலில் நடந்த ஒரு திகில் சம்பவம் இதற்குக் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
What the hell is the point of scaling an iceberg pic.twitter.com/OfsHo7Hnsr
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) March 19, 2025
அதன்படி ஆர்க்டிக் கண்டத்தின் கடல் பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த சமூக ஆர்வலர்கள், கடலில் மிதந்துகொண்டிருந்த ஒரு பிரம்மாண்ட பனிப்பாறையின் மீது ஏற முயற்சி செய்தனர். பாதுகாப்புக்காக கயிறுகள் மற்றும் சிறப்பு உபகரணங்களை பயன்படுத்தியிருந்தாலும், அந்த பனிப்பாறை திடீரென சாய்ந்து கடலில் மூழ்கத் தொடங்கியது. இதனால் அதில் இருந்த இருவர் தண்ணீரில் விழுந்தனர்.
இச்சம்பவம் அருகில் படகில் இருந்தவர்களின் கண் முன்னே நடைபெற்றது. அவர்கள் உடனடியாக எச்சரிக்கை விடுத்தும், பனிப்பாறை மிக வேகமாகக் கடலில் சாய்ந்ததால், அந்த இரு ஆராய்ச்சியாளர்களும் நேராக கடலுக்குள் இழுக்கப்பட்டனர். இச்சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் கடல் மிகவும் அபாயகரமானது மற்றும் ஆபத்தானது எனவும் மிகவும் கவனமாக இருப்பது அவசியம் எனவும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!