திருச்சி.. கெத்து காட்டுவாரா ஓபிஎஸ்.. மந்தகாச புன்னகையில் எடப்பாடி! அந்த ஒன்றரை லட்சத்துல மாலை... க்ரீடம்... மரியாதை!

 
டிடிவி தினகரன் ஓபிஎஸ் சசிகலா

வருகின்ற 24ம் தேதி யார் உண்மையான அதிமுக என நிரூபிப்பதற்காக திருச்சிக்கு வருகை தந்து பொதுக் கூட்டத்தை நடத்த பன்னீர்செல்வம் தரப்பு முஸ்தீபு காட்டிக் கொண்டு இருக்கிறது, சசிகலாவையும், தினகரனையும் அழைப்போம் என வெளிப்படையாகவே பன்னீர் செல்வம் அறிவித்து விட்டார் அதற்கான வேலைகளை கு.ப.கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சத்தமில்லாமல் ஒருபுறம் செய்து வருகிறார்கள்.

எடப்பாடி

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, திருச்சி மாவட்ட செயலாளர்கள் பூங்கொத்து, புத்தகம், சால்வையை தாண்டி, அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆடு,மாடு,சீர்வரிசைகள் என பரிசளித்து வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வரிசையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட் டம் சார்பில் நேற்று ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் சேலத்தில் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

எடப்பாடி

அப்பொழுது, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார், தன் பங்காக ரூபாய் ஒன்றரை லட்சத்தில் மாலை அணிவித்து வாழ்த்து கூறியிருக்கிறார். ஒன்றரை லட்சம் என்றால் மாலையின் விலை இல்லை. ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 500 ரூபாய் கரன்சி நோட்டுக்கள் கொண்ட மாலையையும், ரூபாய் நாற்பதாயிரம் கரன்சிகளில் கிரீடமும் அணிவித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதைக் கவனித்த பழனிசாமி புன்முறுவலுடன் சற்றே அரண்டு போனாராம் 'ரொம்ப காஸ்ட்லியான மாலையா இருக்கே' என்றாராம் எடப்பாடி. அரசியல் சதுரங்கத்தில் வீழ்வது சிப்பாய்களின் தலைகளாக இருந்தால் பரவாயில்லை... குறுக்கும் நெடுக்குமாக வலம் வருகிற மந்திரிகளின் தலைகளும் உருள்கிற சூழல் உருவாகியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web