ஜூலை 14ல் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு கும்பாபிஷேகம்.. இந்தாண்டு இறுதிக்குள் ரோப் கார்!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வருகின்ற ஜூலை 14ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நேற்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ வி.வி.ராஜன் செல்லப்பா பேசுகையில், "மதுரை திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் காசி விஸ்வநாதர் சன்னதிக்கு தாங்கள் அளித்து இருக்கிற ரோப்கார் வசதி உரிய நிதி ஒதுக்கப்படாததால் அதனுடைய திட்டமே செயல்படாமல் உள்ளது.

கிரிவலப் பாதை மேம்பாடு செய்ய அமையாமல் இருக்கிறது. ஏனைய திருச்செந்தூர், பழனியை போல் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாம் திருப்பரங்குன்றத்திற்கு சிறப்பு நிதி ஏதும் ஒதுக்க வேண்டும். அறநிலையத்துறையின் சார்பாக ஒரு மகளிர் கல்லூரியை அமைக்க வேண்டும் " என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “திருப்பரங்குன்றத்துக்கும் திருநீர்மலைக்கும் ரோப்கார் அமைக்க ரூ.26 கோடி அறிவிக்கப்பட்டது. தற்போது டிஜிட்டல் சர்வே, டிரோன் சர்வே, ஜிஓ சர்வே என மூன்றும் முடிவுற்று 2 திருக்கோயில்களுக்கு ரோப்கார் அமைக்க ரூ.32 கோடி செலவாகும் என்று ரைட்ஸ் என்ற நிறுவனம் கருத்துரு அளித்திருக்கிறது.

முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் கூடுதல் நிதியை இந்த ஆண்டு விடுவிப்பதாக உத்திரவாதம் அளித்திருக்கின்றார். நிச்சயம் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக அந்த பணிகள் தொடங்கப்படும். அதே போன்று வரும் 14.7.2025ல் நடைபெறவுள்ள குடமுழுக்கில் நானும் அந்த மாவட்டத்தின் அமைச்சர் மூர்த்தியும் பங்கேற்க இருக்கின்றோம்” என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
