திருப்பூரில் திடீர் கனமழை.... குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி!
Apr 5, 2025, 14:00 IST
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் சுமார் 10 மணி நேரம் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது.

குறிப்பாக, அறிவொளி நகர் பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர். தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் வடக்கு பகுதியில் மட்டும் 15 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
