ரூ.3.13 கோடிக்கு ஏலம் போன டைட்டானிக் பயணியின் கடிதம்!

உலகில் மிகவும் ஆடம்பரக் கப்பலான டைட்டானிக் கப்பல் 1912ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி சவுந்தாம்ப்டனில் பயணிகள் ஏறியபோது கடிதம் ஒன்று எழுதப்பட்டது. இந்தக் கடிதத்தில், “பயணத்தின் முடிவுக்காக காத்திருக்கிறேன், பிறகு தான் மதிப்பீடு செய்ய முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
KOLs in 1912 vs 2025:
— Crystal (@crystalstclair_) April 25, 2025
“It is a fine ship, but I shall await my journey’s end before I pass judgment on her."
Colonel Gracie, Titanic survivor pic.twitter.com/hnX9vAWmbn
இந்த கடிதம் அடுத்த நாள் கோபில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இது இதுவரை ஏலத்தில் விற்பனையான டைட்டானிக் தொடர்பான கடிதங்களில் மிக உயர்ந்த விலை பெற்றதாகவும் ஏலதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
டைட்டானிக் விபத்தில் உயிர்தப்பிய கிரேசி, பின்னர் தனது அனுபவங்களை ‘தி ட்ருத் அபவுட் த டைட்டானிக்’ என்ற புத்தகமாக வெளியிட்டார். விபத்தின்போது பெண்கள் மற்றும் குழந்தைகளை படகில் ஏற்றி காப்பாற்றி, பிறகு கவிழ்ந்த படகின் மீது ஏறி உயிர் தப்பினார்.
கடும் குளிரால் பாதிக்கப்பட்ட கிரேசி, 1912 டிசம்பரில் காலமானார். அவரது போன்ற உயர்ந்த வரலாற்றுப் மதிப்புடைய பயணிகளின் கடிதங்கள் மிக அரிதாகக் கிடைப்பதால், இந்த கடிதத்திற்கு மியூசியம் தரத்திலான மதிப்பு கிடைத்ததாக ஏலம் விடுபவர்கள் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!