வீட்டை விட்டு வெளியே வராதீங்க... நாளை அக்னி நட்சத்திரம் தொடக்கம்!

இந்தியாவை பொறுத்தவரை மே மாதம் என்றாலே நினைவுக்கு வருவது சுட்டெரிக்கும் வெயில்தான். அதிலும் மே மாதத்தில் 25 நாட்கள் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கும். இந்தாண்டு நாளை, மே 4 ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம் மே 28ம் தேதி முடிவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இப்போதே பல்வேறு இடங்களில் 100° பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகிவரும் நிலையில், நாளை மே 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அதேநேரத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. வரும் வாரங்களில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
எனினும் பெரும்பாலான பகுதிகளில் வெயில் அதிகம் இருக்கும் என்பதால் கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்துகிறார்கள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!