இன்று 149 பள்ளிகளுக்கு விடுமுறை.. காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு!
இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில், புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அந்த பகுதிகளில் உள்ள 149 பள்ளிகளுக்கு, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நளினி உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சபூத ஸ்தலங்களில் பூமி ஸ்தலமான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் இன்று டிசம்பர் 8ம் தேதி (திங்கட்கிழமை) காலை நடைபெற உள்ளது.

இந்த புனித நிகழ்வை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குள் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 149 பள்ளிகளுக்கு இன்று 8ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நளினி வெளியிட்டுள்ளார். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
