மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

ஏப்ரல் மாத தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. பல முறை புதிய உச்சத்தை தொட்டு வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.
இந்த வருடத்திற்குள் தங்கத்தின் விலை கிராம் ரூ10000 ஐ தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு தினமும் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வருகிறது. நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் தங்கம் விலையால் நகை என்பது சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே அமைந்து விட்டது.
தொடர்ந்து 4 நாட்களுக்கு தங்கம் விலை அதே விலையே நீடித்து வந்த நிலையில், நேற்று சற்று குறைந்தது. அந்த வகையில் நேற்று (28.04.2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,520க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று (29.04.2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,980க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தின் விலை உயர்ந்த அதேநேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!