தொடர் சரிவில் தங்கம்.... நகைப்பிரியர்கள் உற்சாகம்!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஏப்ரல் 24ம் தேதி வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,200 அதிகரித்து ரூ. 74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி புதன்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ. 2,200 குறைந்து ஒரு சவரன் ரூ. 72,120-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தொடர் சரிவால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை கிராமுக்கு ரூ10குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ9005க்கும், சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 72,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.வெள்ளியின் விலையை பொறுத்தவரை 4வது நாளாக எவ்வித மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ. 111க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ. 1,11,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன. இதனால், தங்கம் விலை சர்வதேச அளவில் உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், விரைவில் தங்கம் விலை கிராம் ரூ. 10 ஆயிரத்தை தொடும் என நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!