ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தினமும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் தங்கம் ஏப்ரல் 22ம் தேதி புதிய உச்சத்தை தொட்டது. மறுநாளே, தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து, ஒரு சவரன் ரூ.72,120-க்கு விற்பனையானது. நேற்று முன் தினம் ஒரே நாளில் இரண்டு முறை அதிரடியாக உயர்ந்தது. அன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,600 உயர்ந்து ரூ.72,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அந்த வகையில் கிராமுக்கு ரூ200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.72,600-க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.9,075-க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ55 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ9130க்கும், சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.73,040-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.110க்கும், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.110000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!