தற்கொலை செய்ய ஒரு நாள் லீவு தாங்க!! மெசேஜ் அனுப்பி எஸ்பி மாயம்!!

 
மகிபால்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மகிபால். இவருடன் அதே போலீஸ் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஒருவர் குற்ற செயல்களுக்கு உடந்தையாக இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மகிபால் புகார் கூறியுள்ளார். ஆனால் அடுத்த சில நாட்களில் புகார் தெரிவித்த உதவி காவல் ஆய்வாளர் மகிபால் விக்கிரவாண்டியில் இருந்து ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். 

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அவர் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருகிறார். தான், எந்த குற்றமும் செய்யாத நிலையில் தன்னை ஏன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தீர்கள் என நியாயம் கேட்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்திக்க அவர் பலமுறை முயன்றுள்ளார். ஆனால் காவல் அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

மகிபால்

இந்நிலையில் உதவி காவல் ஆய்வாளர் மகிபால், ஓய்வு பெற இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து ஆயுதப்படையில் பணி செய்ய வைத்திருந்ததால் மனஉளைச்சல் அடைந்துள்ளார். 

இதனால் தன்னால் உயிர் வாழ முடியாது என்றும் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், அதணுகாக தனக்கு ஒரு நாள் விடுப்பு தருமாறு போலீஸ் எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். இதையடுத்து அவர் நேற்று முன் தினம் பிற்பகல் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான போலீசார், உதவி ஆய்வாளர் மகிபாலை பல இடங்களில் தேடி வருகின்றனர். 

விழுப்புரம்

தற்கொலை செய்துகொள்வதற்கு ஒரு நாள் விடுமுறை கேட்டு போலீஸ் அதிகாரிகளுக்கு குறுந்தகவல் அனுப்பி வைத்து விட்டு உதவி காவல் ஆய்வாளர் மாயமான சம்பவம் விழுப்புரம் மாவட்ட போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web