இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு!

 
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

புதுக்கோட்டை  மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கருவூலங்கள், முக்கிய பணிகள் தவிர பிற அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது. இன்றைய விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஏப்ரல் 1ம் தேதி பணி நாளாக கருதப்படும். தமிழகத்தில் பொதுவாக பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறையை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள்,  சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவு தினங்கள் உள்ளூர்  திருவிழாக்களுக்கு அந்தந்த மாவட்ட அளவில்  உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்படுவதுண்டு. இந்த விடுமுறை மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் பிறப்பிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. 

விடுமுறை

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் திருவிழா  நடைபெற உள்ளது.  விழாவின்  முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும்.புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இதனையடுத்து இன்று மார்ச் 13ம் தேதி திங்கட்கிழமை  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை

இன்று தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், வழக்கம் போல் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில்  ஏப்ரல் 1ம் பணி நாளாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார். முத்துமாரியம்மன் கோவில் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web