இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... நீலகிரி, தஞ்சை மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
இன்று ஜனவரி 7ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கும், தஞ்சை மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு, உள்ளூர் மக்களும் திருவிழாவில் கலந்து கொள்ள வசதியாக இன்று விடுமுறையை அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் வசிக்கும் படுகர் இன மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா இன்று ஜன.7 ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் இன்று ஜனவரி 7ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே போன்று தஞ்சையில், திருவையாறு ஆராதனை இன்று நடைபெறுகிறது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
