இன்று மவுனி அமாவாசை.. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!!
இன்று தை மாத மவுனி அமாவாசை. கங்கை பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் 1 கோடி பேர் வரையில் இன்று புனித நீராடுகிறார்கள். மாதம் தோறும் அமாவாசை வந்தாலும் ஒரு சில அமாவாசை திதி விசேஷமானது. தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வருகிற அமாவாசை திதியைப் போலவே மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினமும் மிக முக்கியமானது. தை மாதத்தில் தான் சூரியன் மகரத்தில் உச்சம் பெறுகிறது. அதனால் தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இன்றைய தினம் தர்ப்பணம் கொடுக்கும் வரை நம் வீட்டு வாசலில் கோலமிடுதல் கூடாது.. முன்னோர்களை வரவேற்க தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்கு நன்றி கூறி நமது வாழ்க்கை சிறக்க மனமுருக பிரார்த்தனை செய்ய வேண்டும்.

நம் பித்ருக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். நிறைந்தவர்கள். அவர்களை இந்த அமாவாசையில் வழிபட்டால் புண்ணியமும், செல்வமும் சேரும் என்பது ஜோதிட அன்பர்களின் வாக்கு. நம் வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டியது அவசியம்.

காலை 6.30 மணிக்குள் அல்லது மதிய வேளை அல்லது சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம்.ராகுகாலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது. அதே போல் தர்ப்பணம் கொடுக்கும் போது கோத்திரம், குலதெய்வம்,3 தலைமுறையின் பெயர்களைக் கூறி தர்ப்பணம் செய்ய வேண்டும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
