இன்றே கடைசி!! கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து விட்டீர்களா?

 
கல்லூரி மாணவிகள்

தமிழகத்தில் மே 8ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும்  164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்,  இளநிலை படிப்புகளுக்கு  1.7லட்சம் இடங்கள்  உள்ளன. இளநிலை முதலாமாண்டு பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு மே 8ம் தேதி  தொடங்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி இதுவரை  2 லட்சத்து 48 ஆயிரத்து 510 மாணவர்கள் விண்னப்பப் பதிவு செய்துள்ளனர். இதில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 104 பேர் கட்டணம் செலுத்தி விட்டனர் எனவும் கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கல்லூரி மாணவிகள்
நடப்பாண்டு மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை பி.காம் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  பி.காம் படிப்பில் சென்னை மாநிலக் கல்லூரியில்  உள்ள 40 இடங்களில் சேர்வதற்கு 6,200 மாணவர்களும், ராணிமேரி  கல்லூரியில் உள்ள 60 இடங்களில் சேர்வதற்கு 4,500 மாணவிகளும், பிகாம் சிஏ படிப்பில் சேர்வதற்கு கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 60 இடங்களுக்கு 3,400 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதற்கு அடுத்தபடியாக  கம்ப்யூட்டர் அறிவியல் பாடப்பிரிவில் சேர்வதற்கும், பிஎஸ்சி வேதியியல் பாடப்பிரிவில் சேர்வதற்கும் அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.  மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழ் மொழி பட்டப்படிப்பு, தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசை பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியலும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கும்  விண்ணப்பம் செய்வதற்கும் அதன் அடிப்படையிலான சந்தேகங்களை தீர்த்து வைக்கவும் வழிகாட்டி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு  அதன்பிறகு ஒவ்வொரு பாடப்பிரிவிலும் மாணவர்கள் சேர்க்கைக்கான குழு அமைக்கப்படும். இதன் பிறகே தரவரிசைப்படி சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று  கடைசி நாள் என்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.


எப்படி விண்ணப்பிப்பது?

மாணவிகள்
மாணவர்கள்   http://www.tngasa.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இன்று மாலைக்குள்  விண்ணப்பிக்க வேண்டும் எனவும், விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.  அதன்பின் சேர்க்கை கலந்தாய்வு  மே 25 முதல் ஜூன் 20ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் எனவும்,  முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web