இன்று மாசி அமாவாசை... முன்னோர் வழிபாட்டிற்காக காவிரி ஆற்றில் கரை புரண்ட மக்கள் கூட்டம்!

தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளயா அமாவாசை ஆகிய தினங்களில் இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று மாசி அமாவாசை என்பதால் காவிரி ஆற்றில் அதிகாலை முதலே பக்தர்கள் புனித நீராடினர். அதனைத் தொடர்ந்து வேத விற்பனர்கள் முன்னிலையில் உயிர் நீத்த தங்கள் முன்னோர்களுக்கு படையல் இட்டு தேங்காய், பழம்,மளிகை சாமான்,ஆகியவற்றை வைத்து என்னுடன் தண்ணீர் வார்த்து திதி கொடுத்து, பிண்டம் வைத்து ,தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
இவ்வாறு செய்வதால் இறந்து போன தங்களது முன்னோர்கள் தங்களுக்கு துணையாக இருந்து ஆசீர்வதிப்பார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. மாசி அமாவாசை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். இதனால் ஸ்ரீரங்கம் பகுதியில் மாம்பழச்சாலை முதல் அம்மாமண்டபம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் நீர் நிலைகள், கடற்கரை, ஆறு, அருவி போன்ற இடங்களில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!