இன்று சிறப்பு ரயில்!! தென் மாவட்ட பயணிகளே குறிச்சிக்கோங்க!!
நாளை ஜூன் 29ம் தேதி வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். கடைசி நேர பரபரப்பை தவிர்க்கவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் அரசு போக்குவரத்து கழகம் தமிழகம் முழுவதும் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தெற்குரயில்வே சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் "*சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று ஜூன் 28 புதன்கிழமை இரவு 11.15 மணிக்கு கரிப்ரத் சிறப்பு ரயில் (எண்:06052) நள்ளிரவு 12 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும். தாம்பரத்தில் நள்ளிரவு 12.43 மணிக்கும் திருநெல்வேலியை மறுநாள் காலை 11.45 மணிக்கும் சென்றடையும். மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜூன் 29ம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரயில் (எண்:06051) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை-திருப்பதி அதிவிரைவு ரயில் (எண்:22616/22615) 29ம் தேதியும் விழுப்புரம்- திருப்பதி விரைவு ரயில் (எண்:16854/ 16853) நேற்று முதல் ஜூலை 2ம் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படும். அதே தேதிகளில் இந்த ரயில்கள் காட்பாடியில் இருந்து புறப்பட்டு கோவை, விழுப்புரத்துக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!