இன்று ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் பயணம்!! தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!!

தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் இன்று அரசு முறை பயணமாக சிங்கப்பூர் செல்கிறார். இன்று நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்டு தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார். அதன்பிறகு ஜப்பான் செல்ல உள்ளார். அங்கும் தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார். ஏற்கனவே ஜப்பான் நிறுவனத்துடன் ரூ3300 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாகத் தான் இன்று முதல்வர் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணம் .
தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தொழில்துறையை மேம்படுத்துவதில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். இதற்காக தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநாடுகளிலும் கலந்து கொண்டு தமிழகத்தில் முதலீடுகளை அதிகப்படுத்தி வருகிறார் முதல்வர். இதனால் வேலை வாய்ப்புக்கள் உருவாவதுடன் தமிழ்நாடு தொழில்நுப்ட அளவில் மேலும் முன்னோடி மாநிலமாக திகழும் எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பொருளாதாராம் 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தப்பட வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தொழில் முதலீடுகளை ஈர்க்க 2022 மார்ச் மாதம் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு துபாய், அபுதாபி நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதில் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 6 தொழில் நிறுவனங்களுடன் ரூ.6100 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனைத்தொடர்ந்து ஜனவரி மாதம் வரை 207 தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் 2024 ஜனவரி மாதம் 10, 11 ஆகிய தேதிகளில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு தமிழகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் முதல்வர் தொழில் முதலீடுகளை ஈர்க்க 2 நாள் பயணமாக இன்று மே 23ம் தேதி செவ்வாய்கிழமை சிங்கப்பூர் செல்ல இருக்கிறார். அங்கு 24ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார். இந்த மாநாட்டில், சிங்கப்பூர் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதற்காக முன்னதாக, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அதே போல் முதல்வர் சிங்கப்பூர் பயணத்தை முடித்து கொண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோ செல்கிறார் அங்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன
ஜப்பான் உடனான இந்த உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் முதல்வர் ஜப்பான் செல்கிறார். அங்கு முன்னணி தொழில்துறைத் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அத்துடன் , தமிழகத்தில் முதலீடு மேற்கொள்ள வருமாறு முதல்வர் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். அதே போல் ஜப்பான் நாட்டில், ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடும் நடைபெற உள்ளது. பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!