இன்று தேரோட்டம்... கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... கலெக்டர் உத்தரவு!

 
விடுமுறை

இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் சந்திர சூடேஸ்வரர் ஆலய தேரோட்டம் நடைபெற இருப்பதால், உள்ளூர் மக்களும் தேரோட்ட திருவிழாவில் கலந்துக் கொள்ள வசதியாக இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அரசு மற்றும் பொது விடுமுறைகளை தவிர்த்து பண்டிகை  விசேஷ மற்றும் உள்ளூர் முக்கிய நிகழ்வுக்காக உள்ளூர் விடுமுறை விடப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள், திருவிழாக்கள், தலைவர்கள் தினம் போன்றவற்றை மக்கள் கொண்டாடி மகிழ அவர்களின் வசதிக்கேற்ப உள்ளூர் விடுமுறையை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்து வருகின்றனர்.

கொடியேற்றம்

அதன்படி இன்று மார்ச் 14 ம் தேதி வெள்ளிக்கிழமை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், சந்திர சூடேஸ்வரர் மலைக்கோயிலின் தேரோட்டம் திருவிழா நடைபெற  உள்ள நிலையில், அந்த பகுதி மக்கள் முழுவதும் திருவிழாவை கொண்டாடி மகிழ ஏதுவாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இன்று மார்ச் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

ஓசூர்

உள்ளூர் விடுமுறை அறிவிப்பைத் தொடர்ந்து இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது எனினும் இன்று நடைபெற இருக்கும் முக்கிய அரசு தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டப்படியே நடைபெறும் எனவும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web