விஜய் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு... 6 பெண்கள் படுகாயம்... பரபரக்கும் நெல்லை...!

 
விஜய்

தமிழகத்தில் டிசம்பர் 17, 18 தேதிகளில் பெய்த பெருமழை வெள்ளத்தால்  தூத்துக்குடி  நெல்லை  மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை செய்தனர். நிவாரணத் தொகை தமிழக அரசு  சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இளையதளபதி விஜய்  நெல்லை,  தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு  நிவாரண பொருட்களை வழங்கினார்.  

விஜய்

அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.  நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகையில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில்  நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  இந்நிலையில், நெல்லையில் நடிகர் விஜய் கலந்து கொண்ட   நிகழ்ச்சியில்  விஜய்க்கு மிகசிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட  கூட்ட நெரிசலில் 2 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  

நடிகர் விஜய்

நெல்லை பாளையங்கோட்டை தனியார் மண்டபத்தில் நடிகர் விஜயை காண குவிந்த கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஜய் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 2 பெண்கள் உட்பட 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதுபெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  நிவாரண உதவி வழங்கிவிட்டு நடிகர் விஜய் புறப்பட்டபோது ரசிகர்கள் போட்டோ எடுக்க முண்டியடித்ததால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக காவல்துறை சார்பில் அறிவிக்கபட்டுள்ளது. 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web